'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிறது. ஆனால், இதுவரை அந்த பரிசை முழுமையாக அனுபவித்தவர் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9 ல் வெற்றி பெற்ற அருணா, ஒரு பேட்டியில் பேசிய போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டும். எனவே, சிறிது சிறிதாக நாங்கள் அந்த பணத்தை கட்டி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.