காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிறது. ஆனால், இதுவரை அந்த பரிசை முழுமையாக அனுபவித்தவர் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9 ல் வெற்றி பெற்ற அருணா, ஒரு பேட்டியில் பேசிய போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டும். எனவே, சிறிது சிறிதாக நாங்கள் அந்த பணத்தை கட்டி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.