சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தற்போது டப் போட்டியாளராக மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற மஞ்சரி எலிமினேட் ஆகி இருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மிகவும் அருமையாக விளையாடி வந்த மஞ்சரிக்கு ஆரம்பம் முதலே பிக்பாஸ் கருணை காட்டவில்லை.
இதற்கிடையில் டாப் 5 போட்டியாளர்களில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது வெளியேறி இருக்கிறார். மஞ்சரி வெளியேறும் போது தன் மகனுக்காக டிராபியை உடைக்காமல் கொண்டு செல்ல பிக்பாஸிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதை பிக்பாஸ் மறுத்துவிடவே மஞ்சரி கணத்த இதயத்துடன் டிராபியை உடைத்துவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸை விமர்சித்தும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.