'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தற்போது டப் போட்டியாளராக மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற மஞ்சரி எலிமினேட் ஆகி இருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மிகவும் அருமையாக விளையாடி வந்த மஞ்சரிக்கு ஆரம்பம் முதலே பிக்பாஸ் கருணை காட்டவில்லை.
இதற்கிடையில் டாப் 5 போட்டியாளர்களில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது வெளியேறி இருக்கிறார். மஞ்சரி வெளியேறும் போது தன் மகனுக்காக டிராபியை உடைக்காமல் கொண்டு செல்ல பிக்பாஸிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதை பிக்பாஸ் மறுத்துவிடவே மஞ்சரி கணத்த இதயத்துடன் டிராபியை உடைத்துவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸை விமர்சித்தும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.