மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சுற்றுலாவை முடித்து கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இனியா தொடர் முடிந்த பின் குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா சென்ற அவர், கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து அவரிடமே கேள்விகள் கேட்டு வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டானதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தான் கமிட்டான சீரியல் எந்த சேனல் மற்றும் எந்த ஸ்லாட் போன்ற விவரங்களை ரசிகர்களையே யூகிக்க சொல்லியிருக்கிறார். இதனால் ஆல்யாவின் ரசிகர்கள் அவரது புதிய சீரியல் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.