சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் |

சின்னத்திரையில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பாபூஸ். பல வருடமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது சின்னத்திரை தான். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'ஜோசியர் ஒருவர் ஒரு பெண்ணால் என் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைக்கும். செருப்பால் அடித்தால் கூட சினிமாவை விட்டு நான் போகமாட்டேன். சினிமாவில் நான் ஒரு அடையாளம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 'செல்வி' சீரியல் தான் எனக்கு பெயர் புகழை கொடுத்தது.
செல்வி சீரியல் நடிக்கும் போது என் வயது 42. அதை இயக்கி தயாரித்து நடித்தது ராதிகா. அன்று மட்டும் அந்த ஜோசியரை நான் பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன்' என அந்த பேட்டியில் பாபூஸ் கூறியுள்ளார். செல்வி தொடருக்கு பின் மிகவும் பிரபலமான பாபூஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்து வருகிறது.