கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சின்னத்திரையில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பாபூஸ். பல வருடமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது சின்னத்திரை தான். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'ஜோசியர் ஒருவர் ஒரு பெண்ணால் என் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைக்கும். செருப்பால் அடித்தால் கூட சினிமாவை விட்டு நான் போகமாட்டேன். சினிமாவில் நான் ஒரு அடையாளம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 'செல்வி' சீரியல் தான் எனக்கு பெயர் புகழை கொடுத்தது.
செல்வி சீரியல் நடிக்கும் போது என் வயது 42. அதை இயக்கி தயாரித்து நடித்தது ராதிகா. அன்று மட்டும் அந்த ஜோசியரை நான் பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன்' என அந்த பேட்டியில் பாபூஸ் கூறியுள்ளார். செல்வி தொடருக்கு பின் மிகவும் பிரபலமான பாபூஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்து வருகிறது.