கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? |
சின்னத்திரையில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பாபூஸ். பல வருடமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது சின்னத்திரை தான். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'ஜோசியர் ஒருவர் ஒரு பெண்ணால் என் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைக்கும். செருப்பால் அடித்தால் கூட சினிமாவை விட்டு நான் போகமாட்டேன். சினிமாவில் நான் ஒரு அடையாளம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 'செல்வி' சீரியல் தான் எனக்கு பெயர் புகழை கொடுத்தது.
செல்வி சீரியல் நடிக்கும் போது என் வயது 42. அதை இயக்கி தயாரித்து நடித்தது ராதிகா. அன்று மட்டும் அந்த ஜோசியரை நான் பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன்' என அந்த பேட்டியில் பாபூஸ் கூறியுள்ளார். செல்வி தொடருக்கு பின் மிகவும் பிரபலமான பாபூஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்து வருகிறது.