சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
'வாணி ராணி, அழகு' ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.