விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |
'வாணி ராணி, அழகு' ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.