பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, மலையாளத்தில் பெங்களூரு டேய்ஸ், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஆனாலும் பீக்கில் இருந்த சமயத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கினார். இந்த நிலையில் மீண்டும் ட்ரான்ஸ், அண்டே சுந்தரானிக்கி என சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா.
தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சூட்சும தர்ஷினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான நான்சென்ஸ் என்கிற படத்தை இயக்கிய எம்.சி ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.




