ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் பொறுப்பான மூத்த மருமகளாக தனம் என்கிற கதாபாத்திரத்தில் சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார் சுஜிதா. முதல் பாகம் நிறைவுற்று இரண்டாவது பாகத்திலும் சுஜிதாவை நடிக்க வைக்க சேனல் தரப்பிலிருந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால், சுஜிதா நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சுஜிதா தற்போது பதிலளித்துள்ளார்.
அதில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான் நடிக்க விரும்பவில்லை. சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஆனால், ஒரே மாதிரி கதையில் 5 வருடங்கள் நடித்தாகிவிட்டது. மீண்டும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார்.