சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சின்னத்திரை நடிகையான தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ்பாபு என்பவரை காதலித்து வந்தார். தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் மகன் இருப்பதால் சாய் கணேஷ்பாபு வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சாய் கணேஷ்பாபு தற்போது தீபாவுடன் வாழாமல் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் சாய் கணேஷ்பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபா தனது இரண்டாவது திருமணத்திலும் ஏமாந்துவிட்டாரே! என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.