பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் |
புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதை பாராட்டி பேசியுள்ள மதுரை முத்து ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக அந்த வழங்கறிஞர்கள் சங்கத்தினருக்கு நன்றி கூறியுள்ளார். அதேபோல் தமிழக வழக்கறிஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுபோன்ற சம்பவங்களால் வெளிநாட்டில் நாம் எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பெருமை பேசுவோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டியதோடு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.