100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் | கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் |

புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதை பாராட்டி பேசியுள்ள மதுரை முத்து ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக அந்த வழங்கறிஞர்கள் சங்கத்தினருக்கு நன்றி கூறியுள்ளார். அதேபோல் தமிழக வழக்கறிஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுபோன்ற சம்பவங்களால் வெளிநாட்டில் நாம் எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பெருமை பேசுவோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டியதோடு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.




