100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள மதுமிதா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் ஒருவழிப்பாதையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாக தெரிகிறது. இதில் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை மதுமிதா அவரது நண்பர் இருவரும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.