ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை |

பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், வெளியே அவருக்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதீப்பின் ஆதரவாளர்கள் வனிதா விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனிதாவும் பிரதீப்பும் பேசிக்கொண்டு சமாதானம் ஆகிவிட்ட வாட்சப் உரையாடலும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு தன்னால் அனுதாபம் காட்ட முடியவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'அடித்தவர் யாரோ அதற்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யு-டியூப்புக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானல் கண்டண்டாக பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா?. நான் இதற்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், சனியன் இந்த நேரம் பார்த்து மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும் அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றிவளைத்தது ஞாபகம் வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பது அப்போது ஞாபகத்து வரவில்லையா? உங்களுக்கென்று இல்லை யாருக்குமே வன்முறை நடக்கக்கூடாது ' என்று பதிவிட்டுள்ளார்.




