இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும், ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இருவருக்கும் ப்ரேக்கப்பா? என்று நேரடியாக கேட்க ஷீத்தல் அதற்கு பதில் எதுவும் கூறாமல் அதற்கு லைக் மட்டும் போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிறது.