விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் எங்களை தவறாக பேசினார்கள்' என கூறியுள்ளார்.
மேலும், சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்களை அடுக்கிய அவர், 'ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்' என இதுபோல் பல கொடுமைகளை சீரியலில் நடிக்கும் போது அனுபவித்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.