கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் பல வகையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து பேசிய போது ‛முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது. அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார்.
இதில் கமல்ஹாசன் அசீமை தான் அப்படி பேசியிருக்கிறார் என புதுவிவாதம் இணையதளங்களில் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து தற்போது பேட்டியளித்துள்ள அசீம், 'பிக்பாஸில் நான் எந்த தவறான வார்த்தையும் பேசவில்லை. வாடி போடி என்று சொன்னேன். அதற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இந்த சீசனில் சிலர் கெட்ட வார்த்தை பேசி வருகிறார்கள். எனக்கு பட்டத்தை விஜய் டிவியோ கமல் சாரோ கொடுக்கவில்லை. மக்கள் தான் எனக்கு ஓட்டுபோட்டு பட்டத்தை ஜெயிக்க வைத்தார்கள். அப்படி என் வெற்றியை கமல் சாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் மக்கள் போட்ட ஓட்டுகளை உதாசீனப்படுத்துவதாக அர்த்தம்' என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.