மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பிக்பாஸ் சீசன் 8-ல், முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யாவுக்கு 2வது இடம் கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
ரவீந்தர், தீபக், ஜாக்குலின், சவுந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா, வி.ஜே.விஷால், ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா, ரயான் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில், முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா, வி.ஜே.விஷால், சவுந்தர்யா, ரயான் ஆகியோர் இருந்தனர். இதில் பணப்பெட்டி டாஸ்க்கில், ஜாக்குலின் வெளியேறினார்.
‛கிராண்ட் பினாலே' நேற்று(ஜன.,19) நடைபெற்ற நிலையில், இதில், முதலில் ரயானும், பின் பவித்ராவும் வெளியேற்றப்பட்டனர். 3வது இடத்தை வி.ஜே.விஷால் பிடித்தார். மக்களின் பெரும் ஆதரவோடு, முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யா ‛ரன்னர் அப்'பாக தேர்வு செய்யப்பட்டு, 2வது இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி டிராபியை வழங்கினார். டிராபியுடன், 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவருக்கு வழங்கப்பட்டது.