இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

பிக்பாஸ் சீசன் 8-ல், முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யாவுக்கு 2வது இடம் கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
ரவீந்தர், தீபக், ஜாக்குலின், சவுந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா, வி.ஜே.விஷால், ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா, ரயான் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில், முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா, வி.ஜே.விஷால், சவுந்தர்யா, ரயான் ஆகியோர் இருந்தனர். இதில் பணப்பெட்டி டாஸ்க்கில், ஜாக்குலின் வெளியேறினார்.
‛கிராண்ட் பினாலே' நேற்று(ஜன.,19) நடைபெற்ற நிலையில், இதில், முதலில் ரயானும், பின் பவித்ராவும் வெளியேற்றப்பட்டனர். 3வது இடத்தை வி.ஜே.விஷால் பிடித்தார். மக்களின் பெரும் ஆதரவோடு, முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யா ‛ரன்னர் அப்'பாக தேர்வு செய்யப்பட்டு, 2வது இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி டிராபியை வழங்கினார். டிராபியுடன், 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவருக்கு வழங்கப்பட்டது.




