தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கோயில் திருவிழாக்களில் வேஷம் கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞரான தாமரைச் செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதொரு முகத்தை கொடுத்தது. பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிரடியாக அசத்திய தாமரைக்கு மக்களின் சப்போர்ட்டும் நிறையவே கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் குணச்சித்திர நடிகையாக சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக தெருக்கூத்து கலைஞராக பல கஷ்டங்களை சந்தித்த தாமரை தற்போது கைநிறைய சம்பாதித்து தன் குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ஏ.மாத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட தாமரை, வரவேற்பு பத்திரிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாமரையின் வளர்ச்சியை பாராட்டியும் அவர் மேன்மேலும் வளரவும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




