கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் |

எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அதுமுதலே அவர் நடித்து வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யாரால் நடிக்க முடியுமென பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆதிகுணசேகரனாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வைரலாகி வந்தது.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, 'சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.