கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க முடியாது. நான் மட்டுமே உணர முடியும். ஏனென்றால் நம் இருவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது. நீ என் பாதுகவலராய் இருப்பாய். நீ என்னை விட்டு செல்ல மாட்டாய். என் உயிர் மூச்சு உள்ளவரை உன்னுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து இருப்பேன். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த துயரமான காலக்கட்டத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வர பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.