பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் |

சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க முடியாது. நான் மட்டுமே உணர முடியும். ஏனென்றால் நம் இருவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது. நீ என் பாதுகவலராய் இருப்பாய். நீ என்னை விட்டு செல்ல மாட்டாய். என் உயிர் மூச்சு உள்ளவரை உன்னுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து இருப்பேன். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த துயரமான காலக்கட்டத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வர பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.