பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது 36 வயதாகும் டிடி, சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம், இவர் தான் மாப்பிள்ளை அவர் தான் மாப்பிள்ளை என பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ள டிடி, 'சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு திருமணம் என்றால் வெளியே தெரிய தான் போகிறது. திருமணம் என்பது சாதனை அல்ல. பத்து வருடத்திற்கு முன் திருமணம் குறித்து இருந்த புரிதல் இப்போது மாறியிருக்கிறது. எல்லோருக்கும் திருமணம் என்பது அவசிய தேவையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றி வரும் விஷயங்களுக்கு நான் கவலைப்பட மாட்டேன். நான் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். நீங்கள் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்' என கூறியுள்ளார்.