'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் |
சின்னத்திரையில் ‛வானத்தை போல' சீரியல் பரபரப்பான பல டுவிஸ்ட்டுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும், ஸ்ரீகுமார் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார். தற்போது அந்த தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் சாந்தினி, ஹீரோ ஸ்ரீகுமார் மூஞ்சில் உண்மையாகவே எச்சில் துப்பியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, அந்த தொடரின் ஒரு காட்சியை மகாநதி சங்கர், ஹீரோவை அவமானப்படுத்தி எச்சில் துப்புவது போல வடிவமைத்துள்ளனர். அந்த காட்சிக்காக சோப்பு நுரை போடலாம் என்று கூட சீரியல் குழுவினர் யோசித்துள்ளனர். ஆனால், ஸ்ரீகுமாரோ நடிப்பு தான் எனக்கு எல்லாமே அதற்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவேன் என்று கூறி உண்மையிலேயே எச்சில் துப்ப கூறியுள்ளார். மகாநதி சங்கர் இதற்கு முடியவே முடியாது என்று மறுத்துவிட, ஸ்ரீகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் சாந்தினியை பேசி சம்மதிக்க வைத்து எச்சில் துப்ப சொல்லியுள்ளனர். அதன்பின் அதை எடிட்டிங்கில் மகாநதி சங்கர் செய்தது போல் மாற்றியுள்ளனர்.
இந்த செய்தியானது தற்போது பரவி வர ஸ்ரீகுமாருக்கு நடிப்பின் மீது இவ்வளவு காதலா? என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.