தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை |
சின்னத்திரையில் ‛வானத்தை போல' சீரியல் பரபரப்பான பல டுவிஸ்ட்டுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும், ஸ்ரீகுமார் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார். தற்போது அந்த தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் சாந்தினி, ஹீரோ ஸ்ரீகுமார் மூஞ்சில் உண்மையாகவே எச்சில் துப்பியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, அந்த தொடரின் ஒரு காட்சியை மகாநதி சங்கர், ஹீரோவை அவமானப்படுத்தி எச்சில் துப்புவது போல வடிவமைத்துள்ளனர். அந்த காட்சிக்காக சோப்பு நுரை போடலாம் என்று கூட சீரியல் குழுவினர் யோசித்துள்ளனர். ஆனால், ஸ்ரீகுமாரோ நடிப்பு தான் எனக்கு எல்லாமே அதற்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவேன் என்று கூறி உண்மையிலேயே எச்சில் துப்ப கூறியுள்ளார். மகாநதி சங்கர் இதற்கு முடியவே முடியாது என்று மறுத்துவிட, ஸ்ரீகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் சாந்தினியை பேசி சம்மதிக்க வைத்து எச்சில் துப்ப சொல்லியுள்ளனர். அதன்பின் அதை எடிட்டிங்கில் மகாநதி சங்கர் செய்தது போல் மாற்றியுள்ளனர்.
இந்த செய்தியானது தற்போது பரவி வர ஸ்ரீகுமாருக்கு நடிப்பின் மீது இவ்வளவு காதலா? என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.