யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
தொழில், சினிமா என கண்ணும் கருத்துமாக இருக்கும் வனிதா விஜயகுமார் தனது மகள்களுக்கு நல்லதொரு தாயாக இருந்து வருகிறார். இப்போதெல்லாம் யாரிடமும் சண்டை போடமால் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் மகள்கள் மற்றும் மகனுடன் ஒரே குடும்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வனிதா, 'சில நினைவுகள் என்றும் மறையாது. காலம் வேகமாக செல்கிறது, குழந்தைகள் நமக்கு சமமாக வளர்ந்து வருகிறார்கள். எனது மகள்கள் தான் எனக்கு சிறந்த நண்பர்கள். அவர்கள் மனிதர்களுக்குரிய அனைத்து அழகான குணங்களுடன் வளர்கிறார்கள். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்' என பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த தாய்மை குணத்தை பாராட்டும் ரசிகர்கள், வனிதா அவரது மகனுடனும் சீக்கிரமே சேர வேண்டும் என ஆறுதல் சொல்லி வருகின்றனர்.