மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகை வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மகள் பெயர் ஜெயனிதா ராஜன். வனிதாவின் விவகாரத்துக்கு பின் தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வனிதாவும் ஜெயனிதாவும் சந்தித்து தங்கள் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது 14 வயதே ஆன ஜெயனிதா ராஜன் 'டே அண்ட் நைட்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வனிதா 'என்னோட அரிசிமூட்டை எழுத்தாளர் ஆகிட்டா' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஜெயனிதாவின் திறமையை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.