'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது சோகக்கதை அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சினிமா, சீரியல் என நடிக்க ஆரம்பித்து இன்று ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார். அண்மையில் கூட சொந்த ஊரில் தனது தாய் தந்தைக்காக ரசிகர்களின் உதவியுடன் வீடு கட்டிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாமரைச் செல்வியின் தந்தை இரண்டு தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சோகத்தை தாங்காத முடியாத தாமரை செல்வி இன்ஸ்டாகிராமில் தந்தையை நினைத்து உருக்கமாக பதிவிட, அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.