'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது சோகக்கதை அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சினிமா, சீரியல் என நடிக்க ஆரம்பித்து இன்று ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார். அண்மையில் கூட சொந்த ஊரில் தனது தாய் தந்தைக்காக ரசிகர்களின் உதவியுடன் வீடு கட்டிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாமரைச் செல்வியின் தந்தை இரண்டு தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சோகத்தை தாங்காத முடியாத தாமரை செல்வி இன்ஸ்டாகிராமில் தந்தையை நினைத்து உருக்கமாக பதிவிட, அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.