ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா தனக்கு எதிராக குரல் எழுப்பும் ஆண்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். முன்னதாக ரவி தன்னை அப்யூஸ் செய்ததாகவும், விஷ்ணுகாந் திருமணத்திற்கு பிறகு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், ஹரீஷ் என்ற இயக்குநருடன் சம்யுக்தா பேசிய ஆடியோ வெளியாகி சம்யுக்தாவின் பொய்களை அம்பலபடுத்தியது. அந்த ஆடியோ குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்யுக்தா, 'நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும், ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கிவிட்டார்' என்று கூறியுள்ளார்.