எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! |

பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து நடிகர் சதீஷ் திடீரென விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இனி அவர் நடிப்பில் 10 முதல் 15 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகும் என கூறியிருந்தார். இதனையடுத்து சதீஷின் ரசிகர்கள் பலரும் 'கோபி கதாபாத்திரத்தில் உங்களை தவிர யாரும் நடிக்க முடியாது. சீரியலில் தொடர்ந்து நடியுங்கள்' என வேண்டுகோள் வைத்து வந்தனர். பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வீஜே விஷால், 'என் அப்பாவை எங்கேயும் போக விடமாட்டேன்' என சதீஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தார்.
மேலும், சதீஷ் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவிலும், 'நான் விலகுவதாக சொன்னதும் நிறைய பேர் போகாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ஷூட்டிங் பிசியா போறதுனால எல்லாருக்கும் ரிப்ளை பண்ண முடியல. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி' என கூறியுள்ளார். அதேசமயம் இம்முறை பேசிய வீடியோவில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எனவே, அவர் மீண்டும் கோபியாக தொடர்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.




