ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த டுவீட்டானது வைரலாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனையடுத்து மற்றொரு டுவீட்டை பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், 'தமிழ்நாட்டில் மதுவினால் என்னை போல் பல அநாதைகள் உருவாகியுள்ளனர். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டர் பதிவுகளை சிறுபிள்ளைத்தனம் என்றும் ஆர்வக்கோளாறு என்றும் அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.