பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த டுவீட்டானது வைரலாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனையடுத்து மற்றொரு டுவீட்டை பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், 'தமிழ்நாட்டில் மதுவினால் என்னை போல் பல அநாதைகள் உருவாகியுள்ளனர். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டர் பதிவுகளை சிறுபிள்ளைத்தனம் என்றும் ஆர்வக்கோளாறு என்றும் அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.