‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மதுபானங்களை குடிக்கும் அதிர்ச்சி செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வருவது தான். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
அதோடு,
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி!
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றிய பதிவே இது. அவர்களது பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை யாரும் கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கு என்றாலும், பெண்களின் உரிமை பணம் ஆண்களின் தவறான செயல்களுக்கு பலியாகக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அவரது இந்த பதிவுகளுக்கு வழக்கம் போல் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வெளியாகி வருகிறது.