நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரவீனா, தமிழில் சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது 'இனியா' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். சென்ற வருடம், பிரவீனாவின் புகைப்படங்கள் சில, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவர் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழகத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் விடுதலையானதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பிரவீனா மட்டுமில்லாமல் அவருடைய மகளின் புகைப்படங்களும் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பிரவீனா சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை செய்து குற்றவாளியான பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர். கைதான பாக்யராஜூக்கு 22 வயது தான் என்பதுடன் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.