பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
சின்னத்திரை பிரபலமான ப்ரியதர்ஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும், விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ரேணுகா கதாபாத்திரம் தான். சொல்லப்போனால் ப்ரியதர்ஷினி 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடிப்பது கூட அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினிக்கு பதில் பானுமதி என்ற புதிய நடிகை நடிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர் 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து தான் ப்ரியதர்ஷினி விலகிவிட்டார் என அப்செட்டாகினர். ஆனால், ப்ரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகவில்லை. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்து வந்த செல்வி கதாபாத்திரத்திலிருந்து தான் விலகியுள்ளார். தற்போது அந்த செல்வி கதாபாத்திரத்தில் தான் பானுமதி நடிக்க உள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதியடைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.