ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை பிரபலங்களான அபிநவ்யா மற்றும் தீபக்குமாருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகும் கணவன் மனைவி இருவருமே தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். தற்போது அபிநவ்யா கயல் தொடரிலும், தீபக்குமார் விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' விலும் நடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் அபிநவ்யா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார். தொடர்ந்து அவரது வளைகாப்பு புகைப்படங்களும் இன்ஸ்டாவில் கவனம் பெற்றது.
இந்நிலையில், அபிநவ்யா தற்போது அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தீபக் மற்றும் அபிநவ்யா ஒன்றாக சேர்ந்தே குழந்தையின் புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.