20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து சித்து கதாபாத்திரத்தில் சீரியல் நடிகர் விஷ்னுகாந்த் நடிக்கவுள்ளார். விஷ்னுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' தொடரின் மூலம் விஷ்னுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'என்றென்றும் புன்னகை' தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமாருக்கு அவருடைய காதலியும் சின்னத்திரை நடிகையுமான அபிநவ்யாவுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தீபக் என்றென்றும் புன்னகை தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியிருப்பதால், ஜீ தமிழ் சேனலை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள்.