ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் அவரது கணவர் தினேஷும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா தற்போது பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். என்னதான் மனைவி தன்னை விட்டு பிரிந்திருந்தாலும் அவர் மீது இப்போதும் பாசம் வைத்திருக்கும் தினேஷ், பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியானது முதல் இப்போது வரை ரச்சிதாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவை க்ரஷ் என்று சொல்லித்திரியும் ராபர்ட் மாஸ்டர் பார்ப்பவர்களை கடுப்பேற்றி வருகிறார். ராபர்ட்டை அண்ணன் என்று ரச்சிதா சொல்லியும் கூட தனக்கு முத்தம் கொடுக்குமாறு வற்புறுத்தி கேட்டபது பலரையும் எரிச்சலடைய செய்தது. இதனால் ரச்சிதாவின் ரசிகர்கள் பலரும் ஸ்டேண்ட் வித் ரச்சிதா என்ற ஹேஷ்டேக்குடன் ராபர்ட் மாஸ்டரின் செயல்களை கண்டித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். ரச்சிதாவின் கணவர் தினேஷும் அந்த ஹேஷ்டேக்கையும் பதிவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து தன் மனைவிக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.
மேலும், அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றிலும், 'ஒரு பெண் ஒரு ஆணுடன் சேர்ந்து பழகுவதாலேயே காதல் என்று சொல்லிவிடக்கூடாது. இதை பார்க்கும் போது பள்ளி செல்லும் சின்ன குழந்தைகள் செய்யும் செயல் போல உள்ளது. மற்றப்படி ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் ஒரு சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்' என்று கூறியிருந்தார்.
ராபார்ட் மாஸ்டர் தன்னுடன் ப்ளிர்ட் செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரச்சிதா ஒரு சில சமயங்களில் அதை தடுக்காமல் என்க்ரேஜ் செய்வது போல் நடந்து கொண்டார். அதை தான் தினேஷ் மறைமுகமாக 'சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்' என சொல்லியிருப்பதாக பலரும் தற்போது பேசி வருகின்றனர். இதேபோன்ற செயலுக்காக அசலை வெளியேற்றிய பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரையும் வெளியேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.