நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து படிப்படியாக யூ-டியூப், சின்னத்திரை, சினிமா, பிக்பாஸ் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். இணைய உலகில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துவிட்டார். அவருக்கு, தற்போது மாஸ் ஹீரோவுக்கு இணையான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காரணம், சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.பி.முத்து சென்றுள்ளார். அப்போது அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடையின் உட்புறத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கூடினர்.
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுப்பதற்காக ஜி.பி.முத்துவை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காகவே பவுன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அந்த பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. அந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது ஏதோ பெரிய ஹீரோவுக்காக தான் கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க தோன்றும். ஆனால், அந்த தானா சேர்ந்த கூட்டம் ஜி.பி.முத்துவை பார்க்க தான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு மாஸா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்ன யாரு? தலைவன் சன்னி லியோனுக்கே பால்கோவா கொடுத்தவராச்சே!!!