ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து படிப்படியாக யூ-டியூப், சின்னத்திரை, சினிமா, பிக்பாஸ் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். இணைய உலகில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துவிட்டார். அவருக்கு, தற்போது மாஸ் ஹீரோவுக்கு இணையான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காரணம், சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.பி.முத்து சென்றுள்ளார். அப்போது அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடையின் உட்புறத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கூடினர்.
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுப்பதற்காக ஜி.பி.முத்துவை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காகவே பவுன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அந்த பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. அந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது ஏதோ பெரிய ஹீரோவுக்காக தான் கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க தோன்றும். ஆனால், அந்த தானா சேர்ந்த கூட்டம் ஜி.பி.முத்துவை பார்க்க தான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு மாஸா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்ன யாரு? தலைவன் சன்னி லியோனுக்கே பால்கோவா கொடுத்தவராச்சே!!!