அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து படிப்படியாக யூ-டியூப், சின்னத்திரை, சினிமா, பிக்பாஸ் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். இணைய உலகில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துவிட்டார். அவருக்கு, தற்போது மாஸ் ஹீரோவுக்கு இணையான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காரணம், சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.பி.முத்து சென்றுள்ளார். அப்போது அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடையின் உட்புறத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கூடினர்.
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுப்பதற்காக ஜி.பி.முத்துவை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காகவே பவுன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அந்த பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. அந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது ஏதோ பெரிய ஹீரோவுக்காக தான் கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க தோன்றும். ஆனால், அந்த தானா சேர்ந்த கூட்டம் ஜி.பி.முத்துவை பார்க்க தான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு மாஸா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்ன யாரு? தலைவன் சன்னி லியோனுக்கே பால்கோவா கொடுத்தவராச்சே!!!