ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குமரன் தங்கராஜன். இன்ஸ்டாவில் எப்போதும் பாசிட்டிவான பதிவுகளை பதிவிட்டு வரும் குமரனுக்கு ரசிகர்கள் அதிகம். பலரும் அவரை சினிமாவுக்கு முயற்சி செய்ய சொல்லி மோட்டிவேட்டும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகரான குமரன், சினிமா நடிகை கீர்த்தி சுரேஷூடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைபார்த்து பலரும், ரசிகர்கள் குமரன் உண்மையாகவே சினிமாவுக்கு போய்விட்டாரா? என கேட்டு வருகின்றனர். மேலும், அந்த பதிவில் 'நீண்ட நாட்களுக்கு பின் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாம் அப்படியே தான் இருக்கிறோம். இன்னும் இளமையாகவும் அழகாகவும்' என கேப்ஷனிட்டு கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் கூறியுள்ளார். எனவே, இவர்கள் முன்னரே நண்பர்களா? இதற்கு முன் சேர்ந்து நடித்துள்ளார்களா? என குமரனின் கமெண்ட் பாக்ஸில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.