பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குமரன் தங்கராஜன். இன்ஸ்டாவில் எப்போதும் பாசிட்டிவான பதிவுகளை பதிவிட்டு வரும் குமரனுக்கு ரசிகர்கள் அதிகம். பலரும் அவரை சினிமாவுக்கு முயற்சி செய்ய சொல்லி மோட்டிவேட்டும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகரான குமரன், சினிமா நடிகை கீர்த்தி சுரேஷூடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைபார்த்து பலரும், ரசிகர்கள் குமரன் உண்மையாகவே சினிமாவுக்கு போய்விட்டாரா? என கேட்டு வருகின்றனர். மேலும், அந்த பதிவில் 'நீண்ட நாட்களுக்கு பின் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாம் அப்படியே தான் இருக்கிறோம். இன்னும் இளமையாகவும் அழகாகவும்' என கேப்ஷனிட்டு கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் கூறியுள்ளார். எனவே, இவர்கள் முன்னரே நண்பர்களா? இதற்கு முன் சேர்ந்து நடித்துள்ளார்களா? என குமரனின் கமெண்ட் பாக்ஸில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.