ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆல்யா தனது இரண்டு குழந்தைகளுடனும் ஜாலியாக நாட்களை கழித்து வருகிறார். இதற்கிடையில் பலரும் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிப்பரா? எப்போது சின்னத்திரையில் வருவார்? என அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். முன்னதாக இதற்கு பதிலளித்த ஆல்யா, தான் இப்போது குழந்தை வளர்ப்பதில் ஜாலியாக இருப்பதாகவும் விரைவில் பிட்னஸ் மற்றும் இதர விஷயங்களை சரிசெய்து நடிக்க வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, 'நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.




