மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் அனிதாவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. நடிப்பதில் ஆர்வமுள்ள அனிதா பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அந்த வகையில் தமிழில் 'சர்க்கார்', 'காப்பான்', உள்ளிட்ட பல பாடங்களில் செய்திவாசிப்பாளர், ஆங்கர் என சில நிமிட காட்சிகளில் தோன்றினார்.
அதன்பிறகு வரலெட்சுமி சரத்குமாரின் 'ஜானி' திரைப்படம் அவருக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை வழங்கியது. தற்போது விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' படத்தில் விமலுக்கு தங்கையாக படம் முழுக்கவே வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வந்த அனிதா அண்மையில் புதுவீடு வாங்கியதை மிகவும் உருக்கமாகவும் மகிழ்ச்சியுடனும் பதிவிட்டிருந்தார்.
அனிதா மற்றும் அவரது கணவர் பிரபாவின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பலரும் வாழ்த்தினர். இந்நிலையில், தற்போது அனிதா அவரது கணவருடன் ஜாலியாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஆனால் திருமணநாளை கொண்டாட அவர்கள் போட்ட ப்ளான் விசா சரியாக கிடைக்காமல் சொதப்பி விட்டது. அதுமட்டுமல்லாமல் அனிதாவும், பிரபாவும் தனித்தனியாக தான் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் தம்பதிகள் இருவரும் தங்களது முதல் வெளிநாட்டு டூரை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.