சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கமரகட்டு, விந்தை, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனீஷாஜித். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கினார். உயிரே, அம்மன் தொடர்களில் நடித்த அவர் கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.
விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பேசிய படி சம்பளம் தரவில்லை. 6 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளனர். தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கினார்கள். படப்பிடிப்பில் சரியான பாதுகாப்பு இல்லை. சின்ன சின்ன விபத்து ஏற்பாட்டாலும் அதையும் தாங்கிக் கொண்டு நடிக்க வேண்டியது இருந்தது. கொரோனா காலத்தில்கூட விடுமுறை தராமல் வேலை வாங்கினார்கள். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.