பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் |
கமரகட்டு, விந்தை, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனீஷாஜித். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கினார். உயிரே, அம்மன் தொடர்களில் நடித்த அவர் கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.
விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பேசிய படி சம்பளம் தரவில்லை. 6 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளனர். தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கினார்கள். படப்பிடிப்பில் சரியான பாதுகாப்பு இல்லை. சின்ன சின்ன விபத்து ஏற்பாட்டாலும் அதையும் தாங்கிக் கொண்டு நடிக்க வேண்டியது இருந்தது. கொரோனா காலத்தில்கூட விடுமுறை தராமல் வேலை வாங்கினார்கள். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.