காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் வெற்றி படமாக அமையவில்லை.
அதன்பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு 'நாதிரு தின்னா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் ராதிகா ப்ரீத்தி சின்னத்திரையை தேர்ந்தெடுத்தார். ராதிகாவின் அழகிய தோற்றம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. இன்றைய நாளில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகைகளில் ராதிகா ப்ரீத்தியும் ஒருவர்.
சமீபத்தில் பூவே உனக்காக தொடரை விட்டு விலகிய ராதிகா ப்ரீத்தி சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், தமிழில் அவர் நடித்திருந்த 'நாதிரு தின்னா' திரைப்படம் வெளியாவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தது. படம் ரிலீஸான பிறகு சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ள 'நாதிரு தின்னா' திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




