ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
சுந்தரி தொடர் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சுந்தரி என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடிக்கிறார். சமீபத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய கேப்ரில்லா தனது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து உருக்கமாக பேசி தனது நடிப்பிற்கும், விருதுக்கும் அவர்கள் தான் காரணம் என புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் ஆகாஷ் தன்னை அணைத்து முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து அதன் கேப்ஷனில் “பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல உன் பேர சொல்ல மறந்துட்டேன்....பதட்டத்துல” என மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு கீழே “உண்மையாவே அம்மா அம்மாச்சி தானே சொல்லணும், உண்மைய மட்டும் சொல்லு பாப்பா போதும்” என கணவர் கூறிய பதிலையும் பதிவிட்டு, 'பாப்பா...நீ தான் என்னுடைய வாழ்நாட்களுக்கான விருது' என தெரிவித்துள்ளார். இவர்களது காதலை பார்க்கும் பலரும் இது தான் உண்மையில் ரியல் ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.