நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுந்தரி தொடர் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சுந்தரி என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடிக்கிறார். சமீபத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய கேப்ரில்லா தனது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து உருக்கமாக பேசி தனது நடிப்பிற்கும், விருதுக்கும் அவர்கள் தான் காரணம் என புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் ஆகாஷ் தன்னை அணைத்து முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து அதன் கேப்ஷனில் “பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல உன் பேர சொல்ல மறந்துட்டேன்....பதட்டத்துல” என மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு கீழே “உண்மையாவே அம்மா அம்மாச்சி தானே சொல்லணும், உண்மைய மட்டும் சொல்லு பாப்பா போதும்” என கணவர் கூறிய பதிலையும் பதிவிட்டு, 'பாப்பா...நீ தான் என்னுடைய வாழ்நாட்களுக்கான விருது' என தெரிவித்துள்ளார். இவர்களது காதலை பார்க்கும் பலரும் இது தான் உண்மையில் ரியல் ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.