''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சுந்தரி தொடர் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சுந்தரி என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடிக்கிறார். சமீபத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய கேப்ரில்லா தனது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து உருக்கமாக பேசி தனது நடிப்பிற்கும், விருதுக்கும் அவர்கள் தான் காரணம் என புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் ஆகாஷ் தன்னை அணைத்து முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து அதன் கேப்ஷனில் “பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல உன் பேர சொல்ல மறந்துட்டேன்....பதட்டத்துல” என மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு கீழே “உண்மையாவே அம்மா அம்மாச்சி தானே சொல்லணும், உண்மைய மட்டும் சொல்லு பாப்பா போதும்” என கணவர் கூறிய பதிலையும் பதிவிட்டு, 'பாப்பா...நீ தான் என்னுடைய வாழ்நாட்களுக்கான விருது' என தெரிவித்துள்ளார். இவர்களது காதலை பார்க்கும் பலரும் இது தான் உண்மையில் ரியல் ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.