என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி மருமகளாக ஐஸ்வர்யா கேரக்டரில் அறிமுகமானார் விஜே தீபிகா. ஆனால், அவர் முகத்தில் இருந்த பருக்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அந்த தொடரை விட்டு விலகினார். அதன் பின் சின்னத்திரையில் தீபிகாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, டான்ஸ், போட்டோஷுட் என மற்ற விஷயங்களில் பிசியாக இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலின் 'சில்லுன்னு ஒரு காதல்' தொடரில் வீஜே தீபிகா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நீண்ட நாள் கழித்து அவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதால் தீபிகாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனக்கு கிடைத்திருக்கும் சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா சின்னத்திரையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.