'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் சில்மிஷம் சிவா. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அவர் தற்போது சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த போது மொழி தெரியாத காரணத்தால் பிச்சைக்காரன் போல தான் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், 'கலக்கப்போவது யாரும் 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனது போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதிகாலையில் 4 மணிக்கு கலக்கப்போவது யாரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு 6 மணிக்கு ஏர்போர்ட் சென்றேன். அங்கு என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியவில்லை. கடவுள் போல ரசிகர் ஒருவர் வந்து எல்லா உதவிகளையும் செய்து விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது வரை எனக்கு அஜித் சார் படம் என்று தெரியாது. ஹெச் வினோத் படம் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜித் சாரிடம் என்னை சில்மிஷம் சிவா என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அஜித் சார் உடனே என்னிடம் கைகொடுத்து ஹலோ சிவா என்றார். எனக்கு தலை எல்லாம் சுத்தி மயக்கமே வந்துவிட்டது.
ஷூட்டிங் முடிந்ததும் ஹோட்டலுக்கு போனேன். ஆனால், அங்கே மொழி தெரியாததால் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். என்னுடைய போன் பேக் எல்லாம் கேரவேனில் மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிச்சைக்காரன் மாதிரி வெளியே சுற்றினேன். கடைசியில் படத்தின் மேக்கப் குழுவினர் தான் என்னை ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் இது' என கூறியுள்ளார்.