டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா, சமீபத்தில் வெளியான 'டாக்டர்' படத்தில் நடித்து அசத்தியிருந்தனர். தற்போது சாராவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான 'தாயில்லாமல் நானில்லை' என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும், சாராவும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். இன்று (ஜனவரி 30) முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்க்கும் சிலர் அர்ச்சனா மற்றும் சாராவை கிண்டலடிக்கும் வகையில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எல்லோருக்கும் வணக்கம். எங்களை வெறுப்பவர்களுக்கான சிறு குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவின் கமெண்டுகளில் எங்கள் மீதான அதிகமான வெறுப்புணர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் பெண்களே எங்களை அதிக அளவில் திட்டுகிறார்கள். ஏன் என்று புரியவில்லை. வெறுப்பவர்களை எண்டர்டெயின் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. உங்கள் கருத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி' என கூறியுள்ளார். அவரது பதிவிற்கு விஜய் டிவியின் திவ்யதர்ஷினி உட்பட செலிபிரேட்டிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.