புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்து மற்றும் ஆல்யா மானசா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை முன்னிட்டு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசவ காலம் நெருங்கிவிட்ட நிலையில், குறைந்தது ஒருமாத காலமாவது ஆல்யா ஓய்வுக்கு சென்றுவிடுவார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா? எனஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'சீரியலை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். இதனால், ராஜா ராணி-2ல் அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என தெரிய வருகிறது. ஆல்யா தற்போது 7 மாதம் கர்ப்பத்துடன் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரீனா கரப்பமாக இருந்த காலத்தில் அவர் ஜெயிலுக்கு சென்றதாக காட்டி பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், ராஜா ராணி-2வை பொறுத்தவரை ஆல்யா தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவர் சீரியலை விட்டு விலகும் பட்சத்தில் சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.