தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்து மற்றும் ஆல்யா மானசா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை முன்னிட்டு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசவ காலம் நெருங்கிவிட்ட நிலையில், குறைந்தது ஒருமாத காலமாவது ஆல்யா ஓய்வுக்கு சென்றுவிடுவார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா? எனஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'சீரியலை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். இதனால், ராஜா ராணி-2ல் அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என தெரிய வருகிறது. ஆல்யா தற்போது 7 மாதம் கர்ப்பத்துடன் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரீனா கரப்பமாக இருந்த காலத்தில் அவர் ஜெயிலுக்கு சென்றதாக காட்டி பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், ராஜா ராணி-2வை பொறுத்தவரை ஆல்யா தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவர் சீரியலை விட்டு விலகும் பட்சத்தில் சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.




