இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ஆகியோர் 2015 முதல் 2023 வரை தன்னை வியாபார ரீதியாக ஏமாற்றியதாக தீபக் கோத்தாரி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஷில்பா மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஏற்கெனவே 'லுக் அவுட் நோட்டீஸ்' உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் சில தினங்களுக்கு முன்பு நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் வந்த வழக்கு விசாரணையின் போது ஷில்பா தம்பதியினர் 60 கோடி ரூபாயை செலுத்திய பிறகுதான் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தீபக், ஷில்பா தம்பதியிடம் வியாபார அபிவிருத்திக்காகக் கொடுத்த பணத்தை அவர்கள் தங்களது சொந்த செலவுக்காகப் பயன்படுத்தினார் என்று புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப் பிரிவினர் அதை விசாரணையில் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி 'லுக் அவுட் நோட்டீஸ்' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.