பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை நேரம் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக நிகழ்ச்சியான ஓம்காரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் சசிகலா. தவிர பல சினிமா மேடைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக பிரபலாமாகியுள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் நடிகையாகவும் அறிமுகமான சசிகலா, தற்போது என்றென்றும் புன்னகை என்ற ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகலா தற்போது கர்ப்பமாக இருப்பதால் சின்னத்திரையிலிருந்து பிரேக் எடுத்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குழந்தையை நலமுடன் பெற்றெடுக்க பலரும் தங்களது வாழ்த்துகளையும் அட்வைஸையும் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா நடிகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சசிகலா, சமீபத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் சூழ தனது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலகலமாக கொண்டாடினார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக பிரேக்கை அறிவித்துள்ளார்.