அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை நேரம் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக நிகழ்ச்சியான ஓம்காரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் சசிகலா. தவிர பல சினிமா மேடைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக பிரபலாமாகியுள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் நடிகையாகவும் அறிமுகமான சசிகலா, தற்போது என்றென்றும் புன்னகை என்ற ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகலா தற்போது கர்ப்பமாக இருப்பதால் சின்னத்திரையிலிருந்து பிரேக் எடுத்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குழந்தையை நலமுடன் பெற்றெடுக்க பலரும் தங்களது வாழ்த்துகளையும் அட்வைஸையும் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா நடிகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சசிகலா, சமீபத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் சூழ தனது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலகலமாக கொண்டாடினார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக பிரேக்கை அறிவித்துள்ளார்.