பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |
விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீ நிதி, ப்ரியா ராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தொடர் செந்தூரப்பூவே. 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ப்ரியா ராமன் வருகைக்கு பிறகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் ஒளிபரப்புவதற்கான டைம் ஸ்லாட் கிடைக்காமல் சில சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன, சில சீரியல்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. தற்போது பிக்பாஸ் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் செந்தூரப்பூவே தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை அந்த சீரியலின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிக விரைவில் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.