மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் வைதேகி காத்திருந்தாள். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
காணாமல் போன வைதேகியாக நடித்துக் கொண்டு ஒரு பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் சரண்யா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது. காணாமல் போன வைதேகியே அவர்தான் என்று. வைதேகியை பிரஜின் காதலிக்கிறார். இந்த பிரச்சினைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாகிறது.