கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் வைதேகி காத்திருந்தாள். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
காணாமல் போன வைதேகியாக நடித்துக் கொண்டு ஒரு பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் சரண்யா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது. காணாமல் போன வைதேகியே அவர்தான் என்று. வைதேகியை பிரஜின் காதலிக்கிறார். இந்த பிரச்சினைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாகிறது.