அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.