கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை |
கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.