மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




