இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
விஜய் டிவியின் நம்பர்1 தொடரான பாரதி கண்ணம்மாவில் டுவிஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக பல புதிய திருப்பங்கள் நடைபெறவுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா சிறைக்கு செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வெண்பா இல்லாமல் கதை எப்படி நகரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக பழைய வில்லனான மாயாண்டி கதாபாத்திரம் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கு செல்லும் வெண்பா அங்கே இருக்கும் மாயாண்டியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க கூட்டு சேர்கிறார். இதற்கிடையில் சிறையிலிருந்து வெளிவரும் மாயாண்டி வெண்பாவின் வேலைக்காரி சாந்தியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதனால் கதைக்களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஒருபுறம் பாரதி கண்ணம்மாவின் ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் முக்கிய நடிகையான வெண்பா கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் அவர் சிறைக்கு சென்றுவிட்டதாக காட்சியமைக்கப்படுள்ளது. நிலவரம் இப்படி இருக்க வில்லனாக என்ட்ரி கொடுக்கும் மாயாண்டி கதாபாத்திரம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பிக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.