ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்கள் வரிசையில் நீண்ட நாட்களாக ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய தொடர்கள் முக்கிய இடத்தை பிடித்து வந்தன. இதில் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடர் அதிக எடையுள்ள கதாநாயகியை வைத்து புதுமையான கதைக்களத்துடன் 1000 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப்போல் மற்றொரு தொடரான சத்யாவிலும் தைரியமான பெண்ணான ரெளடி பேபி சத்யாவுக்கும் பணக்கார பிஸினஸ் இளைஞரான அமுல் பேபி பிரபுவிற்கும் இடையே நடக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுமே வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு தொடர்களின் நாயகன்கள், நாயகிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு நாள் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பிரியமுடியாமல் தான் சொல்கிறோம் குட்பை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொடர்கள் முடித்து வைக்கப்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. திடீரென வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீரியல்களை தொடரும்படியும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கமெண்டுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.